பாடல் #967

பாடல் #967: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

விளக்கம்:

வினைகளில் வீழ்ந்து கிடப்பவர்கள் யாராலும் உருவாக்கப்படாத இறைவனின் திருநாமமாகிய ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தை முறைப்படி மனம் சோர்வடையாமல் ஓதிக்கொண்டிருந்தால் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் வினைகள் மற்றும் அவற்றால் உண்டாகும் துன்பங்களையும் நீக்கி அருளுவான் விரிந்த சடையணிந்த இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.