பாடல் #928

பாடல் #928: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற்று இருந்த இயல்பிது வாமே.

விளக்கம்:

பாடல் #927 இல் உள்ளபடி இறைவனின் பெயராக விளங்குகின்ற அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுதுக்களின் ஆதார மந்திரமாகிய நமசிவாய மந்திரமே திருவம்பலச் சக்கரத்தின் மூலமந்திரம் ஆகும். இந்த மந்திரங்களைச் சுற்றி பாடல் #924 மற்றும் #925 இல் உள்ளபடி மூன்று வட்டங்களுடன் வரைந்தால் திருவம்பலச் சக்கரம் முழுமையாக முறையாக அழகுடன் அமைந்து விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.