பாடல் #946

பாடல் #946: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமாய நவசிம பார்க்கின் மவயநசி
பரமாய சியநம வாம்பரத் தோதிற்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

விளக்கம்:

‘சிவயநம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் ‘சிவ’ இறைவியையும் ‘நம’ இறைவனையும் ‘ய’ ஆன்மாவையும் குறிக்கும். இந்த ‘ய’ எழுத்தை முதலாகக் கொண்டு

ய ந வ சி ம
ம வ ய ந சி
சி ய ந ம வ
வ சி ம ய ந
சி வ ய ந ம

என்ற முறையில் வரைய வேண்டும். இதன் தொடர்ச்சி அடுத்த பாடலிலும் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.