பாடல் #955

பாடல் #955: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பது மாவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்தியும்தந் தானே.

விளக்கம்:

பாடல் #954 இல் உள்ளபடி தமது உடலுக்கு நடுவில் இருக்கும் ஓங்கார எழுத்தை உணர்ந்த சாதகர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் அதைத் தியானித்தால் அதிலிருந்து ஐம்பது அட்சரங்களும் (பாடல் #924 இல் உள்ளபடி) வெளிப்படுவதை உணரலாம். இந்த ஐம்பது அட்சரங்களுடன் ஓங்கார எழுத்தைச் சேர்த்து மொத்தம் ஐம்பத்தோரு அட்சரங்களின் பரிபூரண உச்ச நிலையை சாதகர்கள் தியானத்தின் மூலம் அடைந்தால் வேதம் சொல்லுகின்ற மூலப் பொருளாகிய இறைவன் அவர்களுக்கு முக்தியை அருளுவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.