பாடல் #979

பாடல் #979: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகுந்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி யச்சிவ மாவது வீடே.

விளக்கம்:

பாடல் #978 இல் உள்ளபடி மாறிய ‘சிவாயநம’ எனும் மந்திரமே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களாகவும் கிடைப்பதற்கு அரிய யோகமாகவும் ஞானமாகவும் இருக்கின்றது. இறையருளால் இந்த மந்திரத்தை சாதகம் செய்து கைவரப்பெற்ற சாதகர்கள் தமக்கு கிடைத்த அருள் காட்டிய வழிபடியே அந்த அருளை நிலைபெறச் செய்து தாமே சிவமாவது முக்தியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.