பாடல் #925

பாடல் #925: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாமா னுள்வட்டம்
அமர்ந்த அசபை யாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகை ஆகின்ற சூலமே.

விளக்கம்:

பாடல் #924 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரம் வரைந்து அதனைச் சுற்றி வெளிப்புற வட்டத்தில் ஹர ஹர என்று தொடர்ச்சியாக எழுதி அதற்கு அடுத்த நடு வட்டத்தில் ஹரி ஹரி என்று தொடர்ச்சியாக எழுதி அதற்கு அடுத்த உள் வட்டத்தில் அம் சம் எனும் மந்திரத்தின் பீஜங்களான ஹம்ஸ ஸொஹம் என்ற எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதி அதற்குள் வட்டமாக ஓம் எனும் எழுத்தை எழுதினால் வருவது திருவம்பலச் சக்கரத்தின் சூலமாகும்.

குறிப்பு: இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.