பாடல் #920

பாடல் #920: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இருந்தஇவ் வட்டம் இருமூன்றி ரேகை
இருந்த வதனுள் இரேகை யைந்தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்தறை யொன்றி லெய்து மகாரமே.

விளக்கம்:

திருவம்பல சக்கரம் வடிவமைக்க இடமிருந்து வலமாக ஆறு கோடுகள் வரைந்து அதனோடு இணைந்து மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் வரைந்தால் வரும் சக்கரத்தில் இருபத்தைந்து கட்டங்கள் இருக்கும். இந்த கட்டங்களுக்கு நடுவில் இருக்கும் ம எழுத்து உயிர்களின் ஆன்மாவாக திருவம்பல சக்கரத்தோடு இணைந்து இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.