பாடல் #965

பாடல் #965: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத்து ஆமே.

விளக்கம்:

பாடல் #964 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவிலுள்ள கட்டத்தில் இருக்கும் ஐம்பது எழுத்துக்களுக்குள் அனைத்து வேதங்களும் ஆகமங்களும் அடங்கியுள்ளன. இதனை அறிந்து கொண்ட சாதகர்கள் ஐம்பது எழுத்துக்களும் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்குள் அடங்கிவிடுவதை உணரலாம்.

குறிப்பு: பாடல் #912 இல் உள்ளபடி உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் சாதகர்கள் திருவம்பலச் சக்கரத்திலுள்ள ஐம்பது எழுத்துக்களின் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.