பாடல் #969

பாடல் #969: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஐந்தின் பெருமை அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமை யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு ஆமே.

விளக்கம்:

பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகம் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆற்றலினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைவன் இருக்கும் ஆலயங்கள் அனைத்தும் ‘நமசிவாய’ மந்திரமாகவே இருக்கின்றது. இந்த ஐந்து எழுத்து மந்திரத்தின் பெருமையே அறநெறி தவறாமல் வாழுகின்றவர்கள் வாழ்க்கைப் பாதையாக இருந்து அந்த வழியில் செல்பவர்களை என்றும் இளமையுடன் வைத்திருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.