பாடல் #952

பாடல் #952: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அற்ற விடத்தே அகாரம தாவது
உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே.

விளக்கம்:

பாடல் #951 இல் உள்ளபடி சாதகருக்குள் அன்போடு எழுந்தருளிய இறைவனை ‘அ’ வடிவில் உணரலாம். ‘அ’ வடிவிற்குள் இருக்கும் மும்மலங்களும் நீங்கிய செழுமையான சுடர் போன்ற உண்மை பொருளை கண்டால் அது மாசில்லாத தூய்மையான தங்கத்தை போல் இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.