பாடல் # 918

பாடல் # 918 : நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிரைக் காக்கவல் லாரே.

விளக்கம்:

உயிர்கள் தமக்குள் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் சிவசக்தியாய் ஒன்றிணைந்து வீற்றிருக்கும் விதத்தை அறிவதில்லை. திருவம்பல சக்கரத்தில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தையும் மறையாமல் வீற்றிருக்கும் சிவயநம எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து தூய்மையான எண்ணத்தோடு ஜெபிக்க முடிந்தவர்களின் சகஸ்ரதள தாமரை மலர் மலர்ந்து என்றும் இறவாத நிலையை அடைவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.