பாடல் #1001

பாடல் #1001: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

பொருத்தமான அரிதாரக் கலவையை ஒரு ஓலையின் மேல் பூசி அதன் மேல் பொருத்தமாக ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்களை எழுதி சொல்லும் மந்திரத்தை கிரகிக்கக்கூடிய உத்தமமான வில்வ மரப் பலகையின் மேல் வைத்து மந்திரத்தை எண்பதினாயிரம் (80,000) முறை உச்சரித்தால் வசியம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: வசியம் எனும் வித்தை பகைவர்களாக இருப்பவர்களை நண்பர்களாக மாற்றி எப்போதும் அன்போடு இருக்கச் செய்வது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.