பாடல் #924

பாடல் #924: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி
அடையு மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம் பத்தொன்றும் அமர்ந்தே.

விளக்கம்:

இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் வரைந்தால் இருபத்தைந்து கட்டங்கள் வரும். அதில் ஒரு கட்டத்திற்குள் இரண்டு எழுத்துக்களாக மொத்தம் ஐம்பது எழுத்துக்கள் வரும்படி எழுதி அமைத்து அதைச் சுற்றி ஓம் எனும் எழுத்தை பெரியதாக எழுதி அதன் இறுதியில் க்ஷ ஹ எழுத்துக்களை எழுதி முடித்தால் வரும் சக்கரத்தில் மொத்தம் ஐம்பத்தொரு எழுத்துக்கள் இருக்கும்.

குறிப்பு: திருவம்பலச் சக்கரத்தின் இன்னொரு வடிவத்தை இந்தப் பாடலில் அருளுகின்றார். இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.