பாடல் #954

பாடல் #954: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நீரில் எழுத்திவ் வுலக ரறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.

விளக்கம்:

உலகத்து உயிர்கள் தம்மால் எழுதப்படும் எழுத்துக்களை மட்டுமே அறிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் எழுதப்படாத எழுத்து ஒன்று வானத்தில் இருக்கின்றது அதைத் தேடிக் கண்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. வானத்தில் இருக்கும் எழுதப்படாத ‘ஓம்’ எனும் எழுத்தைத் தேடி அறிந்தவர்கள் கூட அந்த எழுத்துத்தான் தமது உடலுக்குள்ளும் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

One thought on “பாடல் #954

Leave a Reply to சங்கர - முத்துசாமி.Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.