பாடல் #1156

பாடல் #1156: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தரித்திருந் தாளவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.

விளக்கம்:

பாடல் #1155 இல் உள்ளபடி சாதகரின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக வீற்றிருக்கும் இறைவியானவள் சாதகர் எப்போதும் தன்னுடைய ஒளி உருவத்தைத் தரிசித்துக் கொண்டே இருக்கும் படி செய்து வேதங்களின் உண்மையான பொருளாகிய பேரறிவு ஞானத்தை அவருக்கு கொடுத்து ஐந்து புலன்களின் வழியே வரும் வினைகளின் கொடுமையை சாதகருக்கு எடுத்துச் சொல்லி அது வந்து சேராத படி ஐந்து புலன்களையும் தடுத்து அருளி பேரழகுடன் நன்மையே வடிவாக வீற்றிருக்கிறாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.