பாடல் #1232

பாடல் #1232: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

விளக்கம்:

பாடல் #1231 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் உண்மையாக உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களால் விதியென்று சொல்லும் அனைத்து கர்ம வழிகளையும் அதனால் இருக்கும் ஆணவத்தையும் மாயையும் வினையினால் உருவாகும் பெரும் பந்த பாசத்தையும் ஆசையை உருவாக்கி மயக்குகின்ற ஐந்து புலன்களையும் அதனால் வருகின்ற ஆசைகளையும் வென்று விட முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.