பாடல் #1236

பாடல் #1236: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

என்று மெழுகின்ற ஏரினை யெய்தினார்
அன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1235 இல் உள்ளபடி எப்போதும் தெகிட்டாத அமிழ்தமாக எழுச்சியோடு இருந்து கொண்டே இருக்கின்ற பேரழகு வாய்ந்த இறைவியை தமக்குள் உணர்ந்து அடைந்தவர்கள் அடைந்த அந்தப் பொழுதிலேயே இறைவியாகவே ஆகிவிடுவார்கள். அவர்களோடு நீண்ட கூந்தலை உடைய இறைவியும் தீயவற்றை நீக்கி தூய்மையைத் தருகின்ற கங்கையாகவும் குளிர்ந்த ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மாபெரும் தவத்தைப் புரிந்த சாதகர்களோடு எப்போதும் பொருந்தி இருக்கின்ற நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் நிற்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.