பாடல் #1215

பாடல் #1215: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்
கலந்துநின் றாளுயிர் கற்பன வெல்லாங்
கலந்துநின் றாள்கலை ஞானங்க ளெல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாமே.

விளக்கம்:

பாடல் #1214 இல் உள்ளபடி சாதகருக்குள் கலந்து நிற்கின்ற இறைவியானவள் தாமாகத் தனித்து இல்லாமல் என்றும் இளமையுடன் இறைவனுடன் சேர்ந்தே இருக்கின்றாள். அவள் உயிர்கள் அனைத்தும் கற்கின்ற கல்விகளாகவும் அந்த கல்வியைக் கொண்டு செய்கின்ற அனைத்து செயல்களுக்கான அறிவாகவும் இருக்கின்றாள். அவளே என்றும் இளமையுடன் அனைத்து விதமான காலங்களாகவும் இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.