பாடல் #1159

பாடல் #1159: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை யாணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை யாணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை யாணிடைப் பேச்சற்ற வாறே.

விளக்கம்:

பெண்ணாகப் பிறக்கும் ஒரு உயிருக்குள் பெண் தன்மை மட்டுமே இருக்கும் என்று நினைப்பது அறிவீனம். பெண் பாலாக பிறக்கும் உயிருக்குள் பாதி ஆண் தன்மையும் சேர்ந்தே பிறக்கின்றது. அதுபோலவே ஆண் பாலாக பிறக்கும் உயிருக்குள் பாதி பெண் தன்மையும் சேர்ந்தே பிறக்கின்றது. பாடல் #1157 இல் உள்ளபடி இறைவி தனது பெண் தன்மையிலேயே இறைவனின் ஆண் தன்மையையும் கொண்டிருக்கிறாள் என்பதையும் பாடல் #1158 இல் உள்ளபடி இறைவனும் தனது ஆண் தன்மையிலேயே இறைவியின் பெண் தன்மையையும் கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்து கொண்ட சாதகர்கள் தமது பிறவியிலேயே இவர்களின் இரண்டு தன்மைகளும் தம்மோடு சேர்ந்தே பிறப்பதை முழுவதுமாக அறிந்து கொண்டு அதிலேயே மனம் இலயித்து சாதகம் செய்தால் பேச்சில்லாத மோன நிலையில் இறைவனை நோக்கி செல்லுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.