பாடல் #1164

பாடல் #1164: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ்
சொல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மணி தானே.

விளக்கம்:

வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாத அரும்பெரும் ஜோதியாக இருக்கும் இறைவனிடமிருந்து வெளிப்படும் கனிந்த நெருப்புத் தணல் பொதிந்து உள்ள பரவெளி மண்டலத்தில் பாடல் #1163 இல் உள்ளபடி இறைவியின் நிலையை அடைந்த சாதகர்கள் அந்த தணலின் வெப்பத்தை அனுபவித்து சொல்ல முடியாத திகைப்பில் அங்கேயே இருப்பார்கள். அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களும் இயங்குவதற்கு காரணமாகவும் எளிதில் வெற்றி கொள்ள முடியாததாகவும் இருக்கின்ற வினைகளை தனித்திருந்து ஆளுகின்ற பெருந்தலைவியாகிய இறைவியே எளிதில் அடைந்து விட முடியாத மனோன்மணி எனும் சிவசக்தியாக இருக்கிறாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.