பாடல் #1213

பாடல் #1213: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயு மொருத்தி பொருந்தினள்
நாம நமசிவ யென்று இருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1212 இல் உள்ளபடி சாதகருக்கு அமிழ்தத்தை கொடுக்கின்ற இறைவியானவள் அதனால் கிடைக்கும் பேரின்பமாகவும் சாதகர் உண்ணும் உணவாகவும் இருந்து அந்த உணவைச் செரிக்க வைக்கின்ற நெருப்பாகவும் குண்டலினி சக்தியின் அக்னியாகவும் சாதகரோடு எப்போதும் சேர்ந்து இருக்கின்றாள். அவளது திருநாமமாகிய ‘நமசிவ’ எனும் மந்திரத்தை எண்ணி தியானத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தினந்தோறும் தவறாமல் கடைபிடிக்கும் நியமங்களுக்கு (பாடல் #556 இல் காண்க) துணையாகவும் இருந்து அவர்களுக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.