பாடல் #1212

பாடல் #1212: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மேலா மருந்தவ மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்
மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

விளக்கம்:

பாடல் #1211 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்து தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவியோடு குண்டலினி சக்தியை கொண்டு சேர்க்கும் மேன்மையான அரிய தவங்களை மேலும் மேலும் விடாமல் மேற்கொண்டு அதனால் கிடைக்கும் பலனை பெறாமலும் தமது மூச்சுக்காற்றை கட்டுப் படுத்தாமலும் உலகப் பற்றுக்களில் சிக்கி துன்பப்பட்டு தமது வாழ்நாளை வீணாகக் கழித்து ஒரு கண நேரத்தில் உயிரை விட்டுவிடுபவர்கள் பலர். அப்படி இல்லாமல் நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அசைந்து ஆடுகின்ற குண்டலினி சக்தியை முறையாகச் செய்யும் தியானத்தின் மூலம் விடாமல் செய்து தமது உடலின் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அதன் உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்து விட்டால் அங்கு அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்கார எழுத்தின் உருவமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள் சாதகருக்கு அமிழ்தத்தை கொடுத்து அதுவே உணவாக இருக்கும்படி செய்து அருளுவாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.