பாடல் #1199

பாடல் #1199: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்
பத்தியைப் பாழி லுகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

விளக்கம்:

பாடல் #1198 இல் உள்ளபடி சாதகம் செய்பவர்களின் உள்ளுக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள் சாதகம் செய்வதன் மூலமே அறிந்து கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் பெண் தெய்வமாக இருக்கின்றாள். இவளே முக்தியை அருளுகின்ற தலைவி என்பதை அறியாமல் பலர் இருக்கின்றனர். இப்படி இருப்பவர்களே அடியவர்கள் இறைவியின் மேல் வைக்கும் பக்தியை அறிந்து கொள்ளாமல் இழிவாகப் பேசி ஏளனம் செய்து பாவிகளாக இருக்கின்றனர். இந்தப் பாவிகள் தன்னால் புரிந்து கொள்ள முடியாததைப் பார்த்து குரைக்கின்ற நாயைப் போலவே இறைவியை அறிந்து கொள்ளாமல் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.