பாடல் #1176

பாடல் #1176: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
அத்துவ மாயல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

விளக்கம்:

பாடல் #1175 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்ட இறைவி எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். மூன்று வகை முத்திரைகளை தன் வசம் வைத்திருக்கும் உண்மையான ஞானத்தை உடையவளான இறைவி அந்த முத்திரைகளின் தத்துவங்களாகவும் தத்துவங்கள் இல்லாததாகவும் அனைத்துமாகவும் அவளே இருக்கின்றாள். சாதகருக்குள் இருக்கும் பரம்பொருளாகிய இறைவனாகவே இருந்து இயங்குகின்ற பராசக்தியான இறைவி பேரின்பத்தைக் கொடுக்கின்ற சக்தியான இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்து இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.