பாடல் #1205

பாடல் #1205: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை யுன்னி யுணர்ந்திடு மண்மேல்
இருத்திடு மெண்குண மெய்தலு மாமே.

விளக்கம்:

பாடல் #1204 இல் உள்ளபடி சாதகரின் மாயையான எண்ணங்கள் நீங்கி இறைவியின் எண்ணமும் தமது எண்ணமும் வேறில்லை எனும் நிலை பெறும் போது அந்த ஒன்றுபட்ட எண்ணத்தில் வீற்றிருக்கும் இறைவியை மனதிலும் வைத்து வேறு எதிலும் செல்லாமல் தடுத்து நிறுத்தி தியானத்தில் வீற்றிருந்து எண்ணமும் மனமும் பாடல் #1201 இல் உள்ளபடி சாதகருக்குள் ஒரே இடமாக்கி அதிலிருந்து உருவாகும் மேல் நிலையான இறைவியை ஒருமுகமாக எண்ணி தியானித்தால் இந்த பிறவியிலேயே மேல் நிலையான இறைவியிடமிருந்து பெறக்கூடிய எட்டு விதமான சித்திகளையும் சாதகரால் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.