பாடல் #1233

பாடல் #1233: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரங் குழலாளு மப்பதி தானுமுன்
சாரும் பதமிது சத்திய மாமே.

விளக்கம்:

பாடல் #1232 இல் உள்ளபடி உண்மையான ஞானத்தை உணர்ந்து தெளிந்தவர்கள் அறிந்து கொண்ட மெய்யுணர்வாக இருக்கின்ற ஐம்பத்தோரு அட்சரங்களாகவும் அந்த அட்சரங்களுக்கு தேவதைகளாக பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டு இருக்கின்ற அனைத்து தேவர்களுக்குள்ளும் ஒன்றாகக் கலந்து நிற்பது பரம்பொருளாகும். அந்தப் பரம்பொருளும் நறுமணமும் மருத்துவ குணமும் கொண்ட கோடக மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலைக் கொண்ட இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்து இருக்கின்ற மெய்யுணர்வு பெற்றவர்களுக்கு அருளுகின்ற திருவடிகளாகவும் சத்தியத்தின் உருவமாகவும் இருக்கின்றது சிவசக்தியே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.