பாடல் #1181

பாடல் #1181: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை யமுத பயோதரி
பேருயி ராளி பிறிவுஅறுத் தாளே.

விளக்கம்:

பாடல் #1180 இல் உள்ளபடி இறைவனோடு பல விதங்களில் கலந்து இருக்கும் இறைவியானவள் அவனோடு உத்தமமான உயிர்களையும் சேர்த்து அருளுவதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். எம்மால் புகழ்ந்து கூறப்படுகின்ற என்றும் இளமை பொருந்திய இறைவியானவள் வளைந்த புருவங்களோடு சீரும் சிறப்பும் கொண்டவளாக ஏழு உலகங்களிலும் திகழ்ந்து இருக்கின்றாள். வேதங்களாகவே இருக்கின்ற என்றும் இளமையான இறைவி உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலைக் கொண்ட தனங்களை உடையவள். தகுதியான உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலை அளித்து ஆட்கொண்டு இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்து இருக்கும் அவர்களின் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாகச் சேர்த்து அருளுகின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.