பாடல் #1210

பாடல் #1210: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அண்ட முதலாய் அவனி பரியந்தங்
கண்டதொன் றில்லை கனங்குழை யல்லது
கண்டனுங் கண்டியு மாகிய காரணங்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

விளக்கம்:

பாடல் #1209 இல் உள்ளபடி அண்டத்தின் முதல்வியாய் இருக்கும் இறைவியே அண்ட சராசரங்கள் முதல் உலகங்கள் அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருந்து பரிபாலிக்கிறாள் இவளைத் தவிர வேறொரு சக்தியை யாம் கண்டது இல்லை. இருந்தாலும் இறைவி மட்டும் தனியாக நின்று உலகங்கள் அனைத்திற்கும் முதல்வியாக இல்லாமல் சிவப் பரம்பொருளோடு கூடி நின்றே அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றதன் காரணம் உலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களும் படைப்புக்கான இயற்கையில் ஆண் பெண் எனும் இரு நிலைகளில் நிற்பதே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.