பாடல் #1224

பாடல் #1224: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய வைம்ப துடனே யடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

விளக்கம்:

பாடல் #1223 இல் உள்ளபடி சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு இறைவியாகவே இருகின்ற சுழுமுனை நாடியில் வீற்றிருக்கின்ற சக்தியாக இறைவனும் இறைவியும் ஒன்றாகச் சேர்ந்த மனோன்மணி இருக்கின்றாள். பாடல் #1222 இல் உள்ளபடி ஓங்காரம் எழுகின்ற இந்த சுழுமுனை நாடிக்குள் இருந்து வெளிப்படும் பாடல் #955 இல் உள்ளபடி அதன் அட்சரங்களான ஐம்பது அட்சரங்களும் மனோன்மணிக்குள்ளேயே அடங்கி விடும். மனோன்மணி சக்தியாக சுழுமுனை நாடியில் வீற்றிருப்பதே அசையா சக்தியும் அசையும் சக்தியும் ஒன்றாகச் சேர்ந்த பராபரையும் அதில் சரிபாதியாகிய அசையும் சக்தியாகிய பரை எனும் இறைவியும் ஆகும். இந்த இறைவியே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களைப் புரிந்து கொண்டு இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.