பாடல் #1160

பாடல் #1160: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்
காச்சற்ற சோதி கடவுளுடன் புணர்ந்
தாச்சற்று எனுள்புகுந் தாலிக்குந் தானே.

விளக்கம்:

பாடல் #1159 இல் உள்ளபடி பேச்சில்லாத மோன நிலையில் இறைவனை நோக்கி செல்லுகின்ற சாதகர்கள் நன்மை தரும் பெரும் பொருளாகிய இறைவனை தமக்குள் தரிசித்த பெருமைக்கு உரியவர்கள். மாசு மருவில்லாத சோதி வடிவில் மனோன்மணி எனும் பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருக்கும் இறைவி மாசற்ற சோதியான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து பூரண சக்தியாக குற்றம் குறையில்லாத அந்த சாதகர்களின் உள்ளத்திற்குள் புகுந்து பேரின்பத்தில் அவர்களோடு வீற்றிருப்பாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.