பாடல் #1202

பாடல் #1202: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது வோதில்
உவாதி யவளுக் குறைவில தாமே.

விளக்கம்:

பாடல் #1201 இல் உள்ளபடி இறைவியின் திருவடிகளையே தியானித்து சமாதி நிலையில் வீற்றிருக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்து இறைவனோடு சேர்ந்து இருக்கின்றவளும் வில் போல் வளைந்த நெற்றியைக் கொண்டவளுமான இறைவியே தலைவியாக வீற்றிருந்து பாடல் #871 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் ஒன்பது மண்டலங்களுக்கும் முதன்மை சக்தியாக விளங்கி அவளது கருணையால் பாடல் #1193 இல் உள்ளபடி அவருக்குள்ளிருந்து எழுந்த மந்திரத்தை தானாகவே ஒன்பது மண்டலங்களுக்கும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் படி செய்து சாதகரின் உடலையே தமக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.