பாடல் #1239

பாடல் #1239: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆயு மறிவுங் கடந்தணு வாரணி
மாயம தாகி மதோமகி யாயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயமது ஆய்நெறி யாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1238 இல் உள்ளபடி இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர்கள் நுண்ணியதாக அறியும் அறிவையும் தாண்டிய நிலையில் அணுவுக்குள் அணுவாகவும் மாயையாகவும் ஆகி நின்று அனைத்திற்கும் மேன்மையான பெருமையை உடையவளாகவும் இருக்கின்றாள். சிவந்த நிறத்தோடு என்றும் இளமையுடன் பேரானந்தத்திற்கும் மேலான சிவானந்தமாகவே இருக்கின்ற அவளே பேரழகுடன் பேரன்பின் வடிவமாகவே ஆகி சாதகர் செல்கின்ற மேன்மையான வழியாகவும் ஆகி நிற்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.