பாடல் #1194

பாடல் #1194: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

முத்து வணத்தி முகந்தொறு முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி யென்னுள்ள மேவிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1193 இல் உள்ளபடி மூலாதாரத்திலிருந்து முத்துப் போல கிடைக்கும் மந்திரமானது இறைவியின் அம்சத்தில் இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். இந்த மந்திரமான இறைவி முத்து போன்ற வெண்மை ஒளியாகப் பிரகாசிக்கின்றாள். தனது அனைத்து முகங்களிலும் மூன்று கண்களை வைத்திருக்கின்றாள். சக்தி மயமாக இருக்கின்றாள். அளவில்லாத ஆற்றலைக் கொண்டிருக்கின்றாள். அடியவர் வேண்டும் உருவத்தையே மேற்கொண்டு வருகின்றாள். சடை முடியை அணிந்து கொண்டிருக்கின்றாள். பத்துக் கைகளைக் கொண்டிருக்கின்றாள். அசையா சக்தியாகிய இறைவனைச் சுற்றிக் கொண்டிருக்கும் பொன் வளையலாக இருக்கின்றாள். ஞானத்தின் தலைவியாக இருக்கின்றாள். இந்த இறைவியே எமது உள்ளம் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.