பாடல் #1189

பாடல் #1189: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஈறது தான்முத லெண்ணிரண் டாயிரம்
மாறுத லின்றி மனோவச மாயெழில்
தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்துஇருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1188 இல் உள்ளபடி அனைத்தும் சென்று அடைகின்ற இறுதியான இடமாக இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரிலும் பதினாறு கலைகளிலும் முதன்மையாவளாக வீற்றிருந்து சாதகரின் தன்மைக்கு ஏற்றபடி அவருடைய மனதை தன் வசப்படுத்தி வேறு எதிலும் அதைச் செல்ல விடாமல் தடுத்துக் காப்பாற்றி அந்த மனதை தாம் வசிப்பதற்கு ஏற்ற இடமாக பேரழகுடனும் நறுமணத்துடனும் மாற்றுவதற்கு மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்து சாதகருக்கு பேரருளைக் கொடுத்து அதன் படி மாறிய மனதிற்குள் புதியதாக புகுந்து வீற்றிருக்கின்றாள்.

குறிப்பு: முதல் வரியில் வரும் எண்ணிரண்டாயிரம் என்பதன் பொருள் எண் + இரண்டு + ஆயிரம் என்று பிரித்து படிக்க வேண்டும். எண் என்றால் எட்டு அதன் பிறகு வரும் இரண்டால் எட்டை பெருக்கினால் பதினாறு வரும் பதினாறு என்பது உயிர்களின் உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கும் செயல்களைக் குறிப்பதாகும். இதனை பாடல் #1070 இல் காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.