பாடல் #941

பாடல் #941: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுட ரவ்வியல்பு ஆமே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் ஆடுகின்ற இறைவனுக்கு பாதமாக ‘ந’ எழுத்து திருவடியாய் நிற்கும். நாபியாக (தொப்புள்) ‘ம’ எழுத்து நிற்கும். ‘சி’ எழுத்து இருதோள்களாக நிற்கும். ‘வ’ எழுத்து வாயாக நிற்கும். இறைவன் தமக்குள் எழுத்து வடிவாக நிற்பதை கண்டு உணர்ந்த சாதகரின் உயிர் ஒளி மயமாகி இறைவனின் திருவைந்தெழுத்தின் இயல்பை அடைந்து அதன் கடைசி எழுத்தாகிய ‘ய’ எழுத்தாக அவர்களின் ஆன்மா நிற்கும்.

One thought on “பாடல் #941

Leave a Reply to சுரேஷ் சித்தன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.