பாடல் #916

பாடல் #916: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

விளக்கம்:

இறைவனின் திருஉருவாக இருக்கும் ஓங்கார மந்திரத்தைக் குறிப்பதே ஹரஹர எனும் மந்திரமாகும். இதுவே திருவம்பலச் சக்கரத்தில் சிவசிவ என்று அமர்ந்திருக்கும். இதைவிட அறிந்து உணர்ந்து கொள்வதற்கு மிகவும் கடினமான மந்திரம் வேறொன்று இல்லை. அதனாலேயே உலகத்து உயிர்கள் இதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். இந்த மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தால் அனைத்து பிறவிகளும் அன்றே அழிந்து பிறவி இல்லாத நிலையை அடைந்து தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

குறிப்பு: திருவம்பல சக்கரத்தை வரைந்து செபிப்பவர்களுக்கு சிவசிவ மந்திரம் பயனளிப்பது போல ஹரஹர மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தாலே பலன் அளிக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.