பாடல் #943:

பாடல் #943: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

விளக்கம்:

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் அனைத்து உயிர்களுக்குள்ளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. எதையும் கொடுக்கும் வல்லமை பொருந்திய இந்த மந்திரத்தை முறைப்படி குரு உபதேசித்து பெற்று தம்மை பகைவர்கள் போல் சூழ்ந்திருக்கும் வினையால் உருவாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் போகும்படி அந்த பிரணவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கருத்து: உயிர்களுக்குள் மூச்சுக்காற்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் குருநாதரின் உபதேசம் பெற்ற மந்திரத்தையும் சேர்த்து செபித்து கொண்டே இருந்தால் வினைகளால் உருவாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் சென்றுவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.