பாடல் #951

பாடல் #951: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அகார உகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

விளக்கம்:

‘அ’ ‘உ’ எழுத்துக்கள் அடங்கியுள்ள ‘ஓம்’ எழுத்தோடு ‘சி’ நடுவாக இருக்கும் ‘நமசிவய’ எழுத்தையும் சேர்த்து ‘ஓம் நமசிவய’ எனும் மந்திரத்தையும், ‘வ’ முதலாக இருக்கும் ‘வசியநம’ சேர்த்து ‘ஓம் வசியநம’ எனும் மந்திரத்தையும், ‘சி’ முதலாக இருக்கும் ‘சிவயநம’ சேர்த்து ‘ஓம் சிவயநம’ எனும் மந்திரத்தையும் மானசீகமாக வெளியில் இருக்கும் காற்றோடு சேர்த்து செபித்துக் கொண்டே இறைவன் மேல் சிந்தனையை வைத்திருந்தால் ஓங்காரத்தின் முதல்வனாகிய இறைவன் சாதகருக்குள் அன்போடு எழுந்தருளுவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.