பாடல் #1002

பாடல் #1002: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எண்ணாக் கருடனை ஏட்டில் யகாரமிட்
டெண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவற் பலகை யிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

தகுந்த வியாழக் கிழமை அன்று ஓலைச்சுவடியில் ‘யநமசிவா’ என்று எழுதி அதன் மேல் புடம் போட்ட வெள்ளிப் பற்பத்தைப் பூசி பட்டுப்போகாத ஒரு வெள்ளை நிற நாவல் மரப் பலகையின் மேல் வைத்து அந்தப் பலகையை மேற்குத் திசை நோக்கி வைத்து எழுதிய ‘யநமசிவா’ மந்திரத்தை எட்டாயிரம் முறை உச்சரித்தால் ஆகருடணம் (ஆகர்ஷணம்) எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: ஆகருடணம் என்பது எண்ணத்தால் கவர்தல் அல்லது வசீகரித்தல் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.