பாடல் #949

பாடல் #949: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

விளக்கம்:

பாடல் #946 இல் உள்ள முறைப்படி வரையப்பட்ட சக்கரத்திற்குள் பாடல் #929 இல் உள்ளபடி பஞ்சபூதங்களின் குறிகளும் அதன் குணங்களும் இருக்கின்றது. இந்த சக்கரத்திலுள்ள ‘சிவயநம’ எனும் ஐந்தெழுத்து மந்திரமாக இருக்கும் இறைவன் இச்சக்கரத்துள்ளே ஆனந்த நடனம் புரிகின்றான்.

குறிப்பு: பஞ்ச பூதங்களின் குறிகளும் அதன் குணங்களும்:

  1. நிலம் = சதுரம் – வாசனை (முகர்வது)
  2. நீர் = பிறைவட்டம் – சுவை (கிரகித்தல்)
  3. நெருப்பு = முக்கோணம் – ஒளி (வெளிச்சம்)
  4. வாயு = அறுகோணம் – ஸ்பரிசம் (தொடுதல்)
  5. ஆகாயம் = வட்டம் – ஒலி (சத்தம்)

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.