பாடல் #987

பாடல் #987: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டு வரையின்மே லெட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச்
சிட்ட அஞ்செழுத்துஞ் செபிசக் கரமே.

விளக்கம்:

இடமிருந்து வலமாக எட்டு கோடுகளும் மேலிருந்து கீழாக எட்டு கோடுகளும் வரைந்தால் அதற்குள் நாற்பத்தொன்பது கட்டங்கள் வரும். இதில் நடுவிலுள்ள கட்டத்தில் இறைவனின் வடிவமான ‘ஓம்’ எழுத்தை எழுதி அதைச் சுற்றியுள்ள நாற்பத்தெட்டு கட்டங்களிலும் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை மாற்றி மாற்றி எழுதி அமைத்தால் வரும் சக்கரம் செபிப்பதற்கு உகந்ததாகும். (இந்த சக்கரத்தின் அமைப்பு அடுத்த பாடலிலும் தொடரும்)

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.