பாடல் #982

பாடல் #982: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகா லுரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

விளக்கம்:

‘சிவாய’ எனும் மந்திரத்தோடு ‘நம’ சேர்த்து ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும் போதும் மூச்சுக்காற்றோடு சேர்த்து அதற்கு முன்பு ‘ஓம்’ சேர்த்துக் கொண்டு மனதிற்குள் செபித்து வந்தால் மாயையின் தலைவனாகிய இறைவன் சாதகரின் உடலையே தனக்கு தகுதியான வீடாக்கி வீற்றிருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.