பாடல் #956

பாடல் #956: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிக ளத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்துஇருந் தானே.

விளக்கம்:

தொப்புளுக்கு கீழே இருக்கும் மூலாதாரத்தில் ஓம் என்னும் நன்மை தரும் பிரணவ எழுத்து ஒன்று உள்ளது. தீவினையாளர்கள் அந்த பிரணவ எழுத்தின் பயன்களை அறியாமல் இருக்கின்றார்கள். ஓம் பிரணவ எழுத்தின் பொருளை பிரம்மன் முதலான தேவர்களும் கூட அறிந்து கொள்ள முடியாது. ஓம் என்னும் அந்த எழுத்தில் இறைவியோடு தானும் சேர்ந்து இறைவனும் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.