பாடல் #989

பாடல் #989: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பட்டன மாதவ மாறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தை முறைப்படி ‘ஓம் சிவாயநம’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை செபித்து சாதகம் செய்து சதாசிவமூர்த்தியை அடைபவர்கள் தான் எனும் நினைப்பை அறுத்து இறைவனே சரணாகதி என்று இருக்கின்றார்கள். அளவில்லாத இறைவனின் பெருமைகளை எம்மால் இயன்றவரை எடுத்துரைத்து போற்றிப் புகழ்வதைத் தவிர வேறொன்றும் யாம் அறியேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.