பாடல் #966

பாடல் #966: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

பாடல் #965 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தில் உணர்ந்த ஐந்தெழுத்து ‘நமசிவாய’ எனும் மந்திரத்தின் மூலம் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் இறைவன் படைத்தான். இந்த பஞ்ச பூதங்களையும் ஆதார சக்தியாக வைத்து பல அண்ட சராசரங்களையும் இறைவன் படைத்தான். ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலம் படைத்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் காக்கின்றான் இறைவன். ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலம் படைத்துக் காத்த அனைத்துமே தாமே என்பதை காட்டி நின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.