பாடல் #947

பாடல் #947: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

விளக்கம்:

பாடல் #946 இல் உள்ள ‘சிவயநம’ எனும் மந்திரத்தில் இருக்கும் ‘சி’ எழுத்து ஆகாயத்தையும் ‘வ’ எழுத்து நீரையும், ‘ய’ எழுத்து நிலத்தையும் ‘ந’ எழுத்து நெருப்பையும் ‘ம’ எழுத்து வாயுவையும் குறிக்கின்றது. அவை முறையே நிலம் – செம்மை, நீர் – வெண்மை, நெருப்பு – பொன்மை, வாயு – புகைமை, ஆகாயம் – கருமை ஆகிய நிறங்களில் பஞ்ச பூதங்களை இயக்குகின்றது. பஞ்சபூதங்களுடன் ‘சிவயநம’ எனும் பஞ்சாக்கர மந்திரத்தை பாடல் #946 இல் உள்ளபடி முறையாக வரைந்த சக்கரத்தில் இறைவன் வீற்றிருப்பான்.

குறிப்பு: பாடல் #929 இல் சிவயநம எழுத்துக்களுக்கான பஞ்ச பூதங்களின் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.