பாடல் #981

பாடல் #981: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

விளக்கம்:

பாடல் #980 இல் உள்ளபடி ‘சிவாயநம’ எனும் மந்திரத்தில் உள்ள ‘சிவாய’ உடன் ‘அவ்’ சேர்த்து ‘சிவாயஅவ்’ என்று அதன் பொருளை தெளிவாக அறிந்து வாயால் உச்சரிக்காமல் உள்ளத்திற்குள் செபித்தால் அந்த மந்திரமே சாதாகரின் உள்ளத்தில் இறைவனின் திரு உருவமாக இருக்கும். அப்படி உள்ளத்திற்குள் மந்திர வடிவாக இறைவன் வீற்றிருந்தபின் மலமாசுகள் அகன்று இறைவனை உணர்ந்த சாதாகர்கள் தாமே மந்திர வடிவான இறைவனாக இருக்கிறார்கள்.

குறிப்பு: ‘சிவாய அவ்’ என்று பாடலில் இருந்தாலும் இந்த மந்திரத்திற்கான பீஜ மந்திரம் பாடல் #957 இல் உள்ளபடி ‘சிவாய ஔ’ ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.