பாடல் #958

பாடல் #958: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.

விளக்கம்:

பாடல் #957 இல் உள்ள ‘ஹம்சம்’ மந்திரம் பாடல் #925 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவில் இருக்கிறது. இந்த மந்திரத்தை சாதகம் செய்து அதன் சக்தியை அறியாமல் இருக்கின்றார்கள். அதன் சக்தியை அறிந்தவர்களும் வெறுமனே காலையிலும் மாலையிலும் உரக்க செபித்துவிட்டு மந்திரத்தின் பரிபூரண நிலையை அறியாமலேயே சென்றுவிடுகிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.