பாடல் #1000

பாடல் #1000: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற்
பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

விளக்கம்:

நண்பகல் நேரத்தில் சிவன் உருத்திரனாக தாண்டவம் ஆடும் முதுகாட்டில் பச்சை ஓலையில் ஐந்துவித காயங்களான சுக்கு, மிளகு, கடுகு, பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை அரைத்துப் பூசி அதை எடுத்துச் சென்று அக்கினி மூலையில் (தென்கிழக்கு மூலையில்) மூன்று சதுரங்களின் மத்தியில் (முக்கோணத்திற்கு நடுவில்) புதைத்து வைத்துவிட்டால் நமது உள்ளத்தில் அச்சமூட்டும்படி இருக்கும் தீய சக்திகளை எல்லாம் மேலுலகில் இருக்கும் தேவர்களின் துணையோடு அழிக்கும் மாரணம் எனும் சக்தியைப் பெறலாம்.

One thought on “பாடல் #1000

  1. லோகநாதன் Reply

    மிகவும் நன்று

Leave a Reply to லோகநாதன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.