பாடல் #973: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.
விளக்கம்:
உயிர்கள் வாழ உதவும் உணவு தானியங்களாகவும் அதை பக்குவமாக சமைத்த உணவின் சுவையாகவும் இருந்து அந்த உணவை வயிற்றில் செரிக்க வைக்கின்ற நெருப்பாகவும் இருக்கும் சிவசக்தின் பெயர் ‘நமசிவ’ ஆகும். இந்த மந்திரத்தை எப்போதும் தியானித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு தியானத்தின் பலனைத் தரும் தலைவி வெளிப்பட்டு துணையாக நிற்பாள்.
